முகப்பு / ஆய்விதழ் குறித்த அறிமுகம்
இயற்கை பன்னாட்டு ஆய்விதழ் சிறந்த ஆய்வாளர்களால் மதிப்பீடு செய்யப்பெறும், பல்துறை சார்ந்த பன்னாட்டு ஆய்விதழாகும். தமிழ், ஆங்கில மொழியில் எழுதப்பெறும் ஆராய்ச்சி அடிப்படையிலான அசல் கட்டுரைகளை ஊக்குவிப்பதும், வெளியீடு செய்வதும் இயற்கை ஆய்விதழின் பணியாகும்.
வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி, நவீன ஆராய்ச்சியின் வளர்ச்சி ஆகியவற்றின் படிநிலைகளைக் கருத்தில் கொண்டு, ஆய்வுக் கட்டுரைகளைச் சிறப்பாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை இயற்கை பன்னாட்டு ஆய்விதழ் மேற்கொள்கிறது. இதற்கு முன்னர் பிற தளங்களின் வெளியீடு செய்யப்பெற்ற கட்டுரைகளை மறுவெளியீடு செய்வதைத் தடைசெய்கிறது. இயற்கை பன்னாட்டு ஆய்விதழ் ஆண்டுக்கு இரண்டு முறை (மார்ச்சு, செப்டம்பர்) வெளியிடப்பெறுகிறது.
